அனன்யா வெயிட்லெஸ் ரகசியம்
இரா.சரவணன், படங்கள் : பொன்.காசிராஜன்
'ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளிமாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர்யப்படுபவர்களே... 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்’ என்று வியப்பூட்டும் வேகத்தில் உடல் எடையைக் குறைத்திருக்கிறார் அனன்யா.
![](http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p91.jpg)
''மலையாளத்தில் 'பாசிட்டிவ்’ படத்தில் நான் அறிமுகமான சமயமே, உடம்போட ஷேப்பே தெரியாம கொழுக்மொழுக்னு இருப்பேன். கலகலன்னு எப்பவும் அரட்டையடிச்சுட்டே இருப்பதால், அந்த கேரக்டர் எனக்கு செட் ஆகும்னு நடிக்கவெச்சாங்க. அந்தப் படம் பார்த்துட்டுதான் 'நாடோடிகள்’ படத்துக்காக சமுத்திரக்கனி சார் கூப்பிட் டார். கோடம்பாக்கத்தில் அறிமுகமாகும் சந்தோஷத்தில் என் போட்டோ ஆல்பத்தை கனி சாருக்கு அனுப்பி னேன். அதுல தஸ்ஸுபுஸ்ஸுனு நான் பப்ளிமாஸா இருந்ததைப் பார்த்துட்டு, அவருக்கு மயக்கமே வந்துடுச்சாம். 'எனக்கு குண்டான ஜோடின்னு சொன்னீங்க. ஆனா, இவ்வளவு குண்டுன்னு சொல்லலையே’ன்னு சசிகுமார் சாரும் ரகளை பண்ணிட்டாராம். இது கேள்விப்பட்ட தும் எனக்கு சங்டமா ஆயிருச்சு. ஜிம்ல வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் என் நண்பர் ஒருத்தர், 'இப்போ அனன்யாவை நேர்ல பாருங் க’ன்னு சொல்லி, கனி சாரை கன்வின்ஸ் பண்ணியிருக்கார். நான் நேர்ல போய் நின்னதும் என்னை ஆச்சர்யமாப் பார்த்தவர், 'உடம்பைக் குறைக்க, கூட்ட கேரளாவில் எதுவும் மந்திரம் கத்துக்கொடுக்கிறாங்களா?’ன்னு சிரிச்சார். 'நாடோடிகள்’ படத்தில் நடிக்கத் தேர்வானேன்.
![](http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p91a.jpg)
''நொறுக்குத் தீனிகளுக்குத் தடா போட்டதுதான் முதலும் முக்கியமுமான காரணம். அதோட ஜிம், யோகான்னு ரொம்ப வருஷம் சொகுசா இருந்த உடம்பைப் படுத்தி எடுத்துட்டேன். ஆனா, நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெயிட் குறைஞ்சது எனக்கே ஆச்சர்யமான விஷயம்!'' என்கிறார்
![](http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p92.jpg)
''ஜிம்ல எல்லாப் பயிற்சிகளையும் பண்ணுவேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான பயிற்சிகள் பண்ணுவதால், சீக்கிரம் டயர்ட் ஆக மாட்டேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில், அதிகாலை சூரிய நமஸ்காரம் நிச்சயம். நல்லா சாப்பிடுற காலத்தில்கூட நான் இவ்வளவு பயிற்சிகள் பண்ணியது இல்லை. 'நீச்சல் கத்துக்கிட்டா, உடம்பை எப்பவுமே ஸ்லிம்மா வெச்சுக்கலாம்’னு அம்மாவும் அப்பாவும் சொல்றாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே நீச்சல் தெரியும். ஆனா, எனக்குத் தண்ணின்னா பயம். இப்போதான் பயம் விலகி... கத்துட்டு இருக்கேன். நிஜத்திலும் நான் 'நாடோடிகள்’ நல்லம்மா மாதிரிதான்.
ஏதாவது நொறுக்குத் தீனியை அரைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ ரெண்டு வருஷமா எண்ணெய்ப் பதார்த்தங்களை அடியோடு நிறுத்திட்டேன். கொழுப்பு மிகுந்த எந்த உணவுக்கும் என் மெனுவில் இடம் இல்லை. அதே மாதிரி, டயட் இருக்கணும்னு முடிவு பண்ணதுமே, நான் செஞ்ச முதல் வேலை, அரிசிச் சாப்பாட்டை நிறுத்தியதுதான். சாதத்தைத் தொட்டு ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. காலையில் பழங்கள், மதியம் அரிசி தவிர்த்த உணவுகள், ராத்திரி பச்சைக் காய்கறிகள் அல்லது ஜூஸ்னு ரொம்ப சிம்பிள் மெனு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடா இருந்தாலே, உடம்பு ஒழுங்குக்கு வந்துடும். 'பசியோடு உட்கார்ந்து பசியோடு எழணும்’கிறது உடம்பைக் குறைக்க நினைக்கிறவங்க நல்லா மனசுல ஏத்திக்க வேண்டிய விஷயம்!''
![](http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p92a.jpg)
''நேரம் கிடைக்கிறப்ப, பியூட்டி பார்லர் போவேன். முகத்தை அடிக்கடி தண்ணியில் கழுவுவேன். விதவிதமான க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி கொஞ்ச நேரம் கழிச்சுக் கழுவுவேன். முகத்தைப் பொறுத்தமட்டில், எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்கக் கூடாது. அதே நேரம், வறட்சியாகவும் இருக்கக் கூடாது. காயாவும் இல்லாம, பழமாவும் இல்லாத பப்பாளியை அரைவெட்டுக் காய்னு சொல்வாங்க. நம்ம முகம் அந்த மாதிரிதான் இருக்கணும்!''
நேற்று பப்ளிமாஸ்... இப்போ பப்பாளிமாஸா?!