கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தேன்னா நீங்க நிச்சயம் புற்றுநோயால மட்டும்தான் இறப்பீங்க.
--------
2. இந்த ரவுடியால நம்ம பகுதில தொல்லை ரொம்ப அதிகமாயிடுச்சி. அவனை இங்கேர்ந்து துரத்த என்ன பண்ணலாம்?
மிஸ்டர் எக்ஸ்: வர தேர்தல்ல நிக்க வெச்சு MLA ஆக்கிடுவோம். ஒரு அஞ்சு வருஷத்துக்குத் தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்கலாம்.
---------
3. நீங்க என்ன சோப்பு உபயோக்கிறீங்க?
விகாஸ் சோப்பு. சோப்பு மட்டுமில்ல, ஷாம்பூ, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷேவிங் கிரீம் எல்லாம் அதேதான்.
இந்த brand நான் கேள்விப்பட்டதேயில்லையே?
விகாஸ் என்னோட ரூம் மேட்.
----------
4. மிஸ்டர் எக்ஸ் தன் நண்பரிடம்: என்னோட கல்யாணத்துக்கு ஏன் வரலை?
பத்திரிகை கிடைக்கலை.
நான்தான் அதுல பத்திரிகை கிடைக்காட்டாலும் கண்டிப்பா வந்துடுங்கன்னு எழுதிருந்தேன் இல்ல?
---------
5. மனைவி: இன்னிக்கு சொற்பொழிவில சுவாமிஜி சொன்னாரு, சொர்க்கத்துல கணவனையும், மனைவியையும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க விடமாட்டாங்களாம்.
கணவன்: அதனாலதான் அத சொர்க்கம்னு சொல்றாங்க.
---------
6. ஏங்க? பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?
நானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?
--------
7. ஏங்க? நீங்க கண்ணாடியைக் கழட்டிநீங்கன்னா ரொம்ப handsome ஆ இருக்கீங்க.
நீ கூடத்தான் ரொம்ப அழகாத் தெரியற.
--------
8. ஏன் பள்ளிக்கு இன்னிக்கு தாமதமா வர்ற?
சார், ஸ்கூட்டர் puncture ஆயிடுச்சு.
அதனால என்ன? பஸ் ல வரவேண்டியதுதானே?
அதான் சார் நானும் சொன்னேன், ஆனா உங்க பொண்ணு கேக்க மாட்டேன்னுடுச்சு.
--------
9. அக்பர் யாரு?
தெரியல டீச்சர்.
படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?
தெரியல
உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.
---------
10. நேத்து எங்க போயிருந்த?
காதலியோட சினிமாவுக்கு.
எவ்ளோ செலவாச்சு?
முன்னூறு
அவ்ளோதானா?
அரே யார்! அவகிட்ட அவ்ளோதான் இருந்திச்சு.
-------
11. என்னது? ராத்திரி பூரா உங்க பையன் புக் முன்னாடி உட்கார்ந்தும் தேர்ச்சி பெறலையா?
அவன் உட்கார்ந்திருந்தது facebook முன்னாடியாம்.
-------
12. நர்ஸ் நீங்க என்னோட இதயத்தைத் திருடிட்டீங்க.
அதுக்கு முன்னாடி டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு.
--------
13. எதிர்த்த வீட்டு சுனிதாவைப் பாரு, வகுப்புலயே முதல் மாணவியா வந்துருக்கா. நீ என்னடான்னா பெயில் ஆயிருக்க.
சுனிதாவைப் பார்த்ததால்தான் mummy.
--------
14. உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?
கூகுள் னு.
ஏன்?
நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.
----
15. என்னது? அவர் எரிஞ்சிட்டிருக்கிற கட்டடத்துலேர்ந்து ஆறு பேரைக் கஷ்டப்பட்டுக் வெளில அழைச்சுட்டு வந்தும் அவரைப்போட்டு மக்கள் கும்மு கும்முன்னு கும்மி எடுத்திட்டாங்களா?
ஆமா, அவர் அழைச்சுக்கிட்டு வந்தது தீயணைப்பு வீரர்களை.
----
16. ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது. எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன. ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'
'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'
'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
----
17. ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்: என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் 'உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்'.
----
ஆக்கம்: திருமதி.எஸ்.உமா, தில்லி
வாழ்க வளமுடன்!
நன்றி உமா உங்கள் நகை சுவையை நாங்களும் சுவைத்தோம்