• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 17, 2011

    ஆச்சரியமூட்டும் விலங்கினங்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு


    உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை.இருந்த போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் மிகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.
    அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்ட போதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.
    1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு:
    இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    2. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை:
    உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரம்மாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர்.
    இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    3. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்:
    தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை.
    இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    4. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்:
    அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.