'ப்ளஸ் டூ முடித்திருக்கும் நான், பொருளாதார சூழல் காரணமாக பொறியியல் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறேன்.
'லேட்டரல் என்ட்ரி மூலம், பாலிடெக்னிக் முடித்து, ஒரு வேலைக்குச் சென்று சுயமாக சம்பாதித்து, பிறகு, பொறியியல் கல்லூரி கனவை நிறைவேற்றிக்கொள்’ என்று என் ஆசிரியை ஆலோசனை சொல்கிறார். இது சாத்தியமா..?'' என்று கேட்டிருக்கும் பர்கூர், காயத்ரிதேவிக்கு, விளக்கம் தருகிறார்... திருச்சி, துவாக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காமாட்சி.
![](http://new.vikatan.com/aval/2011/04/08/images/avl59.jpg)
சென்னை, கோவை, மதுரை, எட்டையபுரம் போன்ற ஊர்களில் செயல்படும் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மகளிருக்கேயான சிறப்பு பாடப்பிரிவுகளையும் கூடுதல் வசதியாக
![](http://new.vikatan.com/aval/2011/04/08/images/avl59a.jpg)
வேலைக்கு செல்வோரில் உங்களைப் போன்ற மேற்படிப்பு ஆர்வமுள்ளவர்கள் சுயசம்பாத்தியத்தில் பி.இ. படிப்பையும் மேற்கொள்ளலாம். டிப்ளமோ முடித்து பணியிலிருப்பவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள மாலை நேர படிப்பாக மூன்று வருடத்தில் பி.இ. முடிக்க அரசு வழி செய்துள்ளது. இதற் காக அண்ணா பல்கலைக்கழகம் தனது வளாகங்களில் பி.இ. படிப்பை வழங்குகிறது!''
- அவள் விகடன் 08-ஏப்ரல் -2011