* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெய்யிலில் காயவைத்துப் பொடித்து கொண்டு, தினமும் அரை தேக் கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள், பெரியவர்கள் நல்ல நினைவாற்றளுடன் சுருசுப்பாகத் திகழ்வார்கள். வல்லாரை மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொல்லவும் , தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதம் பருப்பின் மேல் தோலை நீக்கி விட வேண்டும். நூறு கிராம் பாதம் பருப்பில் 490 மில்லி கிராம் 'பாஸ்பரஸ்' , தாது உப்பு இருக்கிறது, 'குளுட்ட்டமிக்' அமிலமும் உள்ளது.
* உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
*சமையலில் சீரகம், மிலகு கன்டிபாக இடம்பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக் காய், சோயாபீன்ஸ், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில், பாஸ்பரஸ், உப்பு அதிகம் உள்ளது. இவை தவிர பால், தயிர், போன்றவற்றையும், உணவில் சேர்க்க வேண்டும்.