தும்மல், ஜலதோஷம் மற்றும் தொண்டைவலி ஆகிய நோய்களுக்கு துத்தநாகத்தை மாத்திரை வடிவில் உட்கொண்டால் நோயை விரட்ட முடியும் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.இந்தியாவில் உள்ள சண்டிகரில் சி.டி.எஸ்.ஆர் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. அடிக்கடி பலரை துன்பத்தில் ஆழ்த்தும் தொண்டைவலி, வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண துத்தநாகம் எப்படி உதவும் என்று தீவிர ஆராய்ச்சி நடந்த்து.
வைரஸ் கிருமிகளால் பரவக்கூடிய ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் "லாஜென்சஸ்" எனப்படும் மாத்திரை வடிவ துத்தநாகம் உடனடியாக கட்டுப்படுத்தும் என்று அதில் தெரிய வந்தது.
நீரில் எளிதில் கரையக்கூடிய சர்க்கரை சேர்த்த துத்தநாகம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரச்சனைகளால் தவிப்பவர்கள் இதை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் முழு நிவாரணம் பெற முடியும். |